காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும்.. வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
Recommended Video
பெங்களூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என கன்னட கூட்டமைப்புக்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் திரைத்துறையினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் குறித்து கன்னட கூட்டமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்கின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு எதிராக ஏப்ரல் 5 ல் கர்நாடகாவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகாவில் போராட்டம் வெடிக்கும் என்றும் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.