உடம்பில் ஒட்டு துணி கூட இல்லை.. உங்க வீட்டு அடி.. எங்க வீட்டு அடி இல்லை.. நிர்வாணமாக்கி சரமாரி அடி!
இளைஞரை அடித்து நிர்வாணமாக ஓடவிட்டுள்ளனர் பொது மக்கள்
Recommended Video
அமிர்தசரஸ்: உங்க வீட்டு அடி இல்லை.. எங்க வீட்டு அடி இல்லை.. அப்படி ஒரு அடி.. காதல் நோய் பித்து பிடித்து ஒரு பெண்ணின் பின்னாடியே திரிந்த இளைஞரை ஊர்மக்கள் அடித்து, நிர்வாணமாகவே ஓட விட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ளது கிராமம் குர்வாலி. இங்கு வசித்து வரும் அந்த இளைஞருக்கு சத்திவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணின் மீது காதல்.. ஒரு தலைகாதல் இது.. அதனால் அந்த பெண்ணை எங்கு பார்த்தாலும் லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
என்னென்னமோ ரொமான்ஸ் பண்ணி காட்டியும், விதவித முயற்சி செய்தும் அந்த இளம்பெண் இவரை திரும்பிகூட பார்க்கவில்லை.. இருந்தாலும் என்னைக்காவது தன் அழகில் அந்த பெண் மயங்கி, காதலையும் ஏற்று கொள்வார் என்று இளைஞர் தன் முயற்சியை கைவிடவே இல்லை.
அந்த பெண் எங்கே போனாலும் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இதை அந்த பெண் சட்டை செய்யவில்லை என்றாலும், ஊர் மக்கள் இதை கவனித்துள்ளனர்.. இந்த நிலையில், தன்னுடைய செல்போன்போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி, ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது வீசினார் இளைஞர்.. இதனால் பொறுமை இழந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுவிட்டார்.
10 வயது மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல்.. மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடி உதை.. கானா பாடகரின் மகன் கைது!
உடனே ஊர் மக்களும்,அந்த பெண்ணின் சொந்தக்காரர்களும் திரண்டு அங்கே வந்துவிட்டனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சுற்றி நின்று இளைஞரை தாக்க தொடங்கினர்.. இளைஞன் மன்னிப்பு கேட்டும் ஊர்ஜனத்துக்கு ஆத்திரம் தீரவில்லை.. அதனால், இளைஞரின் டிரஸ்ஸையும் கழட்டிவிட்டனர்.. முழு நிர்வாணமான நிலையில், இளைஞர் கூனிகுறுகி உட்கார்ந்து கதறி அழுதார்.
உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில், இளைஞர் வந்த டூவீலரிலேயே விரட்டி ஓட விட்டனர். இளைஞனும் டிரஸ்ஸே இல்லாமல் நிர்வாணமாக அந்த டூவீலரை ஓட்டி சென்றார்... இதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்துள்ளனர்.. இதுதான் வைரலாகி வருகிறது!