For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிச 19ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

By Shankar
Google Oneindia Tamil News

Public sector bank employees announced strike on Dec 19
டெல்லி: சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுத் துறை வங்கி ஊழியர்கள், டிசம்பர் 19-ந்தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

செனையில் நடைபெற்ற வங்கி ஊழியர்கள் சங்க சம்மேளன கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, வங்கி ஊழியர்களின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் அஸ்வினி ராணா தெரிவித்தார்.

வங்கித் துறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு எதிராகவும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பள உயர்வு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றக் கோரியும், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய திட்ட மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Public sector bank employees announced strike one day strike on Dec 19 for various demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X