For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபாரம் இந்தியா.. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி உள்பட 3 பேர் சுட்டுக் கொலை

Google Oneindia Tamil News

ஜம்மு: புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி உள்பட 3 பேரை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி 2500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்றனர்.

Pulwama Terror attack master mind killed in encounter

அப்போது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர், தனது காரில் 350 கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்களை எடுத்துக் கொண்டு சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனத்தின் மீது காரை மோதினார்.

இதில் வெடிப்பொருட்கள் வெடித்து சிதறியதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு கடந்த சில நாட்களுக்கு இந்திய விமான படை பதிலடி கொடுத்தது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாத முகாம்களை வெடிகுண்டுகளை வீசி அழித்தது.

பின்னர் பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் அந்நாட்டு எல்லையில் விழுந்த இந்திய விமானத்தின் விங் கமாண்டர் அபிநந்தனை பிணையாக பிடித்து வைத்து பாகிஸ்தான் ஆட்டம் காட்டியது.

5 வருடங்களில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. மோடியின் பெருமைகளில் இது முக்கியமானது! 5 வருடங்களில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. மோடியின் பெருமைகளில் இது முக்கியமானது!

இதையடுத்து ஒரே நாளில் உலக நாடுகள் மூலம் அழுத்தம் கொடுத்த இந்தியா, பாகிஸ்தானை பணிய வைத்தது. இது இந்தியர்களுக்கு மாபெரும் வெற்றியாகும்.

இந்த நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தீவிரவாதி முத்சார் அகமது கான் உள்பட 3 பயங்கரவாதிகளை ட்ரால் அருகே பிங்லிஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.

English summary
Jaish-E-Mohammed terrorist Mudasir Ahmed who is believed to be master mind of Pulwama attack and other 2 were killed by CRPF Personnels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X