மீண்டும் மீண்டும் உறவு.. வற்புறுத்திய காதலன்.. கத்தியால் குத்திய பாய் பிரண்ட்!
Recommended Video
புணே: செக்ஸ் வைத்துக் கொள்ள மேலும் மேலும் தொல்லைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த 23 வயது இளைஞர் தனது ஹோமோ பார்ட்டனரை கத்தியால் குத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
புணே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் வர்தாக் (46). இவர் 23 வயது இளைஞருடன் ஹோமோ செக்ஸ் பழக்கம் வைத்திருந்தார். இவர்கள் இரு ஆண்டுகளாக இந்த உறவு முறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் 23 வயது இளைஞர் ராஜேஷ் வர்தாக் தங்கியுள்ள இடத்துக்கு சென்றார். அங்கு இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டனர். இதையடுத்து ராஜேஷ் வர்தாக் மறுநாள் காலையும் செக்ஸ் வேண்டும் என 23 வயது இளைஞரிடம் கேட்டார்.
அதற்கு அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் மேலும் மேலும் தொல்லை கொடுத்ததால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் ராஜேஷை கத்தியால் குத்தினார்.
இதனால் பலத்த காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த இளைஞர் மீது ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். ஓரின சேர்க்கை குற்றமல்ல என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.