செல்போன் பறித்த கொள்ளையன்.. அடிவாங்கி கொண்டு விடாமல் துரத்தி பிடித்த 15 வயது சிறுமி.. வைரல் வீடியோ
ஜலந்தர்: பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செல்போன் திருடன் தாக்கியதில் காயமடைந்த நிலையிலும் அவர்களை சிறுமி ஒருவர் மடக்கிபிடித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
Recommended Video
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி குசம் குமாரி. இவர் திங்கள்கிழமை டியூஷன் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காபூர்தலா சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சிறுமியின் செல்போனை பறித்தனர்.
பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவர் செல்போனை பறித்துக் கொண்டு மீண்டும் பைக்கில் ஏற முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட சிறுமி அந்த நபரின் சட்டையை கெட்டியாக பிடித்து கொண்டு இழுத்தார்.
இதனால் நிலைத்தடுமாறிய அந்த நபர் சிறுமியை கடுமையாக தாக்கினார். அப்போது அந்த சிறுமி அவரை தப்பிக்கவிடாமல் கடுமையாக போராடினார். சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் செல்போன் திருடனை மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
ராமநாதபுரம் இளைஞர் படுகொலை.. மதப் பிரச்சினை காரணம் அல்ல.. ராமநாதபுரம் காவல்துறை விளக்கம்
பைக் ஓட்டிய நபர் தப்பி சென்றுவிட்டார். சிறுமியின் செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.