For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாப் வாங்க பில்கிஸ்.. சர்தார்கள் இருக்கோம்! ரத்தம் சிந்தி காப்போம் -பாடகர் ரப்பி செர்கில் அழைப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பில்கிஸ் பானுவை பஞ்சாபுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார் பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில்.

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தது.

முக தசை சிதைவு நோய்..சிறுமி தான்யாவிற்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை..பழைய முகம்..அம்மா ஆனந்த கண்ணீர் முக தசை சிதைவு நோய்..சிறுமி தான்யாவிற்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை..பழைய முகம்..அம்மா ஆனந்த கண்ணீர்

கலவரம்

கலவரம்

இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

28 ஆம் தேதி தொடங்கிய கலவரம் மார்ச் மாதம் வரை நீண்டது. மார்ச் 3 ஆம் தேதி தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

கூட்டு பலாத்காரம்

கூட்டு பலாத்காரம்

அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு அந்த கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது ஒரு வீட்டில் இருந்த 19 வயது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானுவை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது. நாட்டையே அதிர வைத்த இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணை குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது.

11 பேருக்கு ஆயுள் தண்டனை

11 பேருக்கு ஆயுள் தண்டனை

ஆனால், சாட்சிகளை அழித்ததாகவும் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்தியதாகவும் கூறி மும்பைக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

விடுதலை

விடுதலை

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 11 பேரும் குஜராத் அரசு பொதுமன்னிப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும், குற்ற தன்மையை கருத்தில் கொண்டும் விடுவிக்க ஆணை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து தண்டனை பெற்ற 11 பேரும் கோத்ரா துணைச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்பு வழங்கப்பட்டது.

ரப்பி செர்கில்

ரப்பி செர்கில்

இதுகுறித்து பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில் தெரிவித்துள்ளதாவது, "நான் பில்கிஸிடம் சொல்ல விரும்புகிறேன், பஞ்சாபுக்கு வாருங்கள்! எங்களின் கடைசி துளி ரத்தத்தை தந்து உங்களை பாதுகாப்போம். சர்தார்கள் உங்களை கவனித்து கொள்வார்கள். இது என் சமுதாயம் பற்றியது மட்டுமல்ல. நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு ஆதரவளித்து, அவருடைய வலி எங்கள் வலி என்பதை அவரிடம் தெரிவிக்க விரும்புகிறேன், அவர் தனி நபர் இல்லை." என்று கூறியுள்ளார்.

English summary
Punjabi Singer Rabbi Shergill invited Bilkis Bano to Punjab: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பில்கிஸ் பானுவை பஞ்சாபுக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார் பிரபல பஞ்சாப் பாடகர் ரப்பி செர்கில்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X