ரியோவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து: ஹைதராபாத் காளி கோவிலில் நேர்த்திக்கடன்
ஹைதராபாத்: ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார். ஹைதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
இந்திய பேட்மின்டன் வீராங்கனை சிந்து ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்தார். இப்போது பி.வி. சிந்துவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு பரிசுப் பணம் தந்திருக்கின்றன. ஹைதராபாத் மக்கள் மட்டுமல்லாது முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரும் 'பி.வி. சிந்துவிற்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
Hyderabad: Rio Olympics silver medalist PV Sindhu offers prayers at Simhavahini Mahankali temple (Lal Darwaza). pic.twitter.com/zLSbDWcixH
— ANI (@ANI_news) August 27, 2016
வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து ஹைதராபாத்தில் உள்ள பிரசத்தி பெற்ற லால் தார்வாசா கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிம்மவாஹினி காளியை தரிசனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது ஏராளமான விளையாட்டு ரசிகர்கள் சிந்துவை காண திரண்டிருந்தனர்.