என்ன பாசம், என்ன பாசம்: ட்விட்டரில் எமோஷனல் ஆன சிந்து
ஹைதராபாத்: தன் மீது நம்பிக்கையும், அன்பும் வைத்துள்ள அனைவருக்கும் பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.
ரியோடி ஜெனீரோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஹைதராபாத்தை சேர்ந்த பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்நிலையில் அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பயிற்சியை மதி, ஈடுபாட்டை கவுரவப்படுத்து, முடிவுகளை கொண்டாடு என்பதை நம்புகிறேன். என்ன ஒரு அருமையான வாரம். எனக்கு இந்த மாபெரும் வெற்றி கிடைக்க ஆதரவு தெரிவித்த, பிரார்த்தனை செய்த, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நாடே எனக்காக வேண்டியது.
— Pvsindhu (@Pvsindhu1) August 25, 2016
உங்களின் அன்பை பெற்ற நான் மிக அதிர்ஷ்டசாலி இந்த தருணத்தில் அயராது உழைத்த, என்னை பற்றி பெரிதாக கனவு கண்ட எனது பயிற்சியாளர் மிஸ்டர் கோபிசந்த்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு ஆதரவு தெரிவித்து வரும் என் பெற்றோர், ஸ்பான்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படி நடந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.