ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை சரமாரியாக அடித்த கிராமத்தினர்.. ஆட்டைத் துப்பி விட்டு மரணித்த பாம்பு!
ஜம்ஷெட்பூர்: ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள காதிகிராம் பகுதியில் ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு ஒன்றை கிராம மக்கள் அடித்ததில் அது விழுங்கிய ஆட்டை துப்பிவிட்டு இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
காதிகிராம் பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஷம்பு சிங் என்பவரின் ஆடு காணாமல் போனது.
காணாமல் போன ஆட்டை தேடிச்சென்ற அவர் கண்ணில் பெரிய அளவில் இருந்த மலைப்பாம்பு ஒன்று சிக்கியது.
கிராம மக்களுக்கு தகவல்:
மலைப்பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் சொன்னார்.
கற்கள், கட்டையால் தாக்குதல்:
இதையடுத்து மலைப்பாம்பை சுற்றி கூடிய கிராம மக்கள், ஷம்பு சிங்கின் ஆட்டை மலைப்பாம்பு விழுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மலைப்பாம்பை கற்கள் மட்டும் கட்டையால் தாக்க துவங்கினர்.
ஆட்டை துப்பிய பாம்பு:
கிராம மக்கள் அடித்ததில் படுகாயமடைந்த மலைப்பாம்பு விழுங்கிய ஆட்டை துப்பியது.
கொன்று விட்டதாக தகவல்:
சுமார் 2 மணி நேரம் கழித்து ஆட்டை துப்பிய மலைப்பாம்பை கிராம மக்கள் அடித்து கொன்று காட்டுக்குள் வீசிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.