For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களை வழிநடத்த தலைவி ராப்ரி தேவி இருக்கிறார்: ராஷ்ட்ரிய ஜனதாதள பொதுச் செயலாளர்

By Siva
Google Oneindia Tamil News

Rabri Devi is still there to guide us: RJD leader Ramkripal Yadav
பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இல்லாத நேரத்தில் அவரின் மனைவி ராப்ரி தேவி கட்சியை வழிநடத்துவாராம்.

மாட்டுத் தீவன வழக்கில் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி தான் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் பொதுச் செயலாளர் ராம்க்ரிபால் யாதவ் கூறுகையில்,

ராப்ரி தேவி எங்கள் தலைவி. அவர் எங்களை வழி நடத்த இங்கு தான் உள்ளார். ஏற்கனவே இது போன்ற நிலைமை ஏற்பட்டபோது எங்கள் கட்சி மேலும் வலுப்பெற்று வந்தது என்றார்.

முன்னதாக 1997ம் ஆண்டு இதே தீவன ஊழல் வழக்கில் லாலு சிபிஐ நீதிமன்றம் முன்பு சரண் அடைந்தபோது தனது முதல்வர் பதவியில் தன் மனைவி ராப்ரி தேவியை அமர வைத்துவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
With Lalu Prasad convicted in the multi-crore fodder scam case, RJD today put up a brave front saying his wife and former Chief Minister Rabri Devi is "still there to guide us".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X