சீடருடன் உறவு கொள்ள வற்புறுத்தினார் ராதே மா... டிவி நடிகை டோலி பிந்த்ரா புகார்
மும்பை: ராதா மா தனது சீடர் ஒருவருடன் தன்னை உறவு வைத்து கொள்ள கூறியதாக டிவி நடிகை டோலி பிந்த்ரா பரபரப்பு புகார் கூறி உள்ளார். ராதே மா மூலம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பை பெண் சாமியார் ராதே மா கடந்த 15 நாட்களாக ஊடகங்களில் அடிபட்டு வருகிறார். 46 வயதான இவர் 10 வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.தனது 18 வயதில் மோகன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்த பின்னர் தன்னுடைய கணவரை பிரிந்து சாமியாராக வலம் வரத்தொடங்கினார்.
ஜிகு ஜிகு ஆடைகள்
பெயருக்குத்தான் சாமியார் ஆனால் ஜிகு ஜிகு மேக் அப்... லிப்ஸ்டிக்... விலை உயர்ந்த ஆடைகள் என ஒரு நடிகையைப் போல பெண் சாமியார் ராதே மா வலம் வருகிறார். சாமியார் ராதே மாவின் ஆட்சேபகரமான படங்கள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பக்தர்களுக்கு ஆசி
ராதே மா தனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமான படங்களும் வெளியாகின. இவர் குட்டை பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ
ஒரு பக்தர் ராதே மாவை அப்படியே அலேக்காக தூக்கிச் சுற்றி பெருமிதம் அடைகிறார். அந்த வீடியோவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிவி நடிகை புகார்
ராதே மாவுக்கு எதிராக பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சர்ச்சை முடிவதற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சி டோலி பிந்த்ரா தற்போது ஒரு குற்ற சாட்டை எழுப்பி உள்ளார்.
கொலை மிரட்டல்
ராதா மா தனது சீடர் ஒருவருடன் தன்னை உறவு வைத்து கொள்ள கூறியதாக கூறி உள்ளார். மேலும் அவர் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாகவும் கூறி உள்ளார். இது குறித்து டோலி பிந்த்ரா மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
20 பெயர்கள்
ராதே மாவின் சீடர்கள் என்னை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முயன்றனர். ஒரு முறை அவரது மகன் மற்றும் அவரது சீடர் ஒருவரும் மற்ற சீடர்கள் முன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர் என்று 20 பெயர்களை பெயர்களை குறிப்பிட்டு உள்ளார் டோலி பிந்த்ரா.