For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் ஏன் மினி ஸ்கர்ட் அணிந்து, அவ்வளவு மேக்கப் போட்டிருந்தேன்?: ராதே மா பதில்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: தான் சிவப்பு நிற குட்டைப் பாவாடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததன் காரணத்தை பெண் சாமியாரான ராதே மா தெரிவித்துள்ளார்.

பெண் சாமியார் ராதே மா சிவப்பு நிற குட்டைப் பாவாடை அணிந்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரதட்சணை கொடுமை, 6 பேரை தற்கொலை செய்யத் தூண்டியது உள்ளிட்டவற்றுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் ராதே மா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

பக்தர்கள்

பக்தர்கள்

நான் பக்தர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது அவர்கள் மாடர்ன் உடையை என்னிடம் அளித்து அதை அணியுமாறு கேட்டுக் கொண்டனர். அதனால் அதை அணிந்தேன்.

ஆபாசமா?

ஆபாசமா?

நான் அணிந்த மாடர்ன் உடை ஒன்றும் ஆபாசமாக இல்லை. அதை அணிந்ததில் என்ன தவறு? சாதுக்களும், சாத்விகளும் இப்படித் தான் ஆடை அணிய வேண்டும் என்று உங்களுக்கு யார் கூறியது?

மேக்கப்

மேக்கப்

நான் பக்தர்களின் பேச்சை கேட்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். பக்தர்கள் தான் எனக்கு அந்த உடையை அணிவித்து மேக்கப்பும் போட்டுவிட்டனர்.

வங்கி

வங்கி

எனது வங்கி கணக்கில் வெறும் ரூ. 8 முதல் ரூ.10 லட்சம் தான் உள்ளது. இது குறித்து நீங்கள் சிபிஐ வைத்து விசாரணை நடத்தலாம். ஆனால் விசாரணையில் ஒன்றும் கிடைக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராதே மா.

English summary
God woman Radhe Maa told that she wore the miniskirt as her devotees asked her to do so.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X