ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ... மீடியா மீது பாயும் அனுராக் காஷ்யப்!
டெல்லி: நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ லீக் ஆன விவகாரத்தில் ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் அனலைக் கக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டில், சமூக வலைதளங்களில் வலம் வரும் வக்கிரப் புத்தி கொண்டவர்களை விட மோசமாக இருக்கின்றன ஊடகங்கள். தேவையில்லாமல் இதை புரமோட் செய்கிறார்கள் என்று கடுமையாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த வீடியோ நியூயார்க்கில் தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோ எப்படி லீக் ஆனது என்பது குறித்து அங்குள்ள தயாரிப்பு நிறுவனம் விசாரித்து வருகிறது என்று கூறியுள்ளார் காஷ்யப்.
முன்னதாக மும்பை போலீஸில் இந்த வீடியோ லீக் குறித்து சைபர் பிரிவில் புகார் கொடுத்தார் காஷ்யப் என்பது நினைவிருக்கலாம்.
விரைவில் லீக் செய்த குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடித்து விடுவார்கள் என்றும் காஷ்யப் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ராதிகாவின் இந்த வீடியோ சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரல் ஆகியது. காஷ்யப்பின் குறும்படம் ஒன்றில் இடம் பெறும் காட்சிதான் இது. அதில் ராதிகா தோன்றுகிறார்.
கதைப்படி, கேமராவுக்கு முன்பு நிர்வாணமாகும் காட்சியில் நடித்துள்ளார் ராதிகா. அந்த ஷாட் எடுத்தபோது கேமராவைக் கையாண்டது முதல் அங்கிருந்த அனைவருமே பெண்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த வீடியோ லீக் ஆனதால் தற்போது சர்ச்சையாகியுள்ளது.