ராகுல் காங்கிரஸ் தலைவரானால் எங்களுக்கு ரொம்ப நல்லது: ஸ்மிருதி இரானி
டெல்லி: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் பாஜகவுக்கு நல்ல காலம் பிறக்கும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க உள்ளார் என்று கூறப்பட்டது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் விருப்பத்தை சோனியா நிறைவேற்ற உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
ராகுல் தலைவராக பதவியேற்கும் செய்தியில் உண்மை இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ரேபரேலி தொகுதிக்கு சென்ற சோனியா காந்தி இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் இது பற்றி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில்,
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவரானால் அது எங்களுக்கு(பாஜக) நல்ல காலம் என்று அர்த்தம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஸ்மிருதி இரானி ராகுல் காந்தியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாக்கிப் பேசி வருகிறார் என்று குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.