மோடி ஜி! எக்ஸாம் வாரியர்ஸ் 2 எப்போ ரிலீஸ் செய்ய போறீங்க- ராகுல் கேள்வி
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தை போக்க எக்ஸாம் வாரியர்ஸ் 2 எப்போது வெளியிடுவீர்கள் என்று மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: சிபிஎஸ்இ கேள்வித்தாள் லீக்கானதால் மன அழுத்தம் அடைந்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் 2 என்ற புத்தகத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது.
டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் சிபிஎஸ்இ கேள்வித்தாள் பரவியது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வெளியானது. இதையடுத்து அந்தப் பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாற்று தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
PM wrote Exam Warriors, a book to teach students stress relief during exams.
— Rahul Gandhi (@RahulGandhi) March 30, 2018
Next up: Exam Warriors 2, a book to teach students & parents stress relief, once their lives are destroyed due to leaked exam papers. pic.twitter.com/YmSiY0w46b
இதனால் பெற்றோர், மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், பள்ளி மாணவர்கள் தேர்வு காலங்களில் மனஉளைச்சல் அடைய கூடாது என்பதற்காக எக்ஸாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
தற்போது சிபிஎஸ்இ வினாத்தாள் லீக்கானதால் மனஉளைச்சலில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு எக்ஸாம் வாரியர்ஸ் 2 என்ற புத்தகத்தை மோடி எப்போது வெளியிடுவார் என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.