இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும்: ட்ரம்புக்கு ராகுல் ட்விட்டரில் வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்புக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations @realDonaldTrump on being elected US President.I hope our countries continue to work together closely&remain strong partners
— Office of RG (@OfficeOfRG) November 9, 2016
அதில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு எனது வாழத்துக்குளை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.