சாய் பே சர்ச்சா.. ரோட்டோர கடையில் ராகுல்.. கலக்கல் வீடியோ
ராஜஸ்தானிய கிராம மக்களுடன் ராகுல் காந்தி டீ குடித்தார்.
Recommended Video
ராஜஸ்தான்: ராகுல்காந்தி ரோட்டோர கடை ஒன்றில் டீ குடிக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கை கொஞ்ச நாளாகவே அனைவரையும் திரும்பி பார்த்து வைத்து வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசின்போது, இடைத்தேர்தலுக்கு ராகுல் பல வட மாநில கிராமங்களுக்கு பயணிப்பார்.
சப்பாத்தி சாப்பிட்டார்
அப்போது சில குடிசை வீடுகளுக்குள் நுழைந்து அங்கு சப்பாத்தி சாப்பிட்ட சம்பவமும் நடைபெற்றது. ஒரு செல்வந்தர் பிள்ளை சாதாரண குடிசை வீட்டுக்குள் நுழைந்து சப்பாத்தி சாப்பிடுகிறாரே என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.அப்போது மட்டுமல்ல, எப்போது வெளி மாநில தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்களுக்கு செல்லும்போதெல்லாம் ராகுல் சாமான்ய மக்களுடன் ஒருவராகவே கலந்து விடுவது இயல்பு.
டீ, பிஸ்கட்
ராஜஸ்தானில் இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள ராகுல் வந்திருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த ஒரு டீக்கடைக்குள் நுழைந்துவிட்டார். அந்த கடையில் ஏற்கனவே சிலர் உட்கார்ந்து டீ, பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருந்தனர். கடைக்கு சென்ற ராகுல் ஒரு கப் டீ வேண்டும் என்றார்.
டீக்கடைக்குள் ராகுல்
ராகுல் காந்தி தனது கடைக்குள் வந்துவிட்டதை பார்த்ததும் கடைக்காரருக்கு குஷி தாங்கவில்லை. ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சூப்பராக ஒரு டீ போட்டு ராகுலிடம் கொடுத்தார். அதை வாங்கிக் குடித்த ராகுல் கடைக்குள் இருந்த பொதுமக்களிடம் கேஷூவலாக பேச தொடங்கினார்.
முதல்வர், ஸ்டாலின்
டீ கடையில் ராகுல் அமர்ந்து அனைவருடனும் டீ குடிக்கும் வீடியோ தற்போது வைர்லாகி வருகிறது. இப்படித்தான் நம்ம ஊரிலயும் முதலமைச்சர், துணை முதல்வர் உட்பட நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் வரை மக்களுடன் மக்களாக கலந்து ரோட்டோர கடைகளில் டீ குடித்தது பெரிதாக பேசப்பட்டது!!