For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் என்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறை யோசிக்க வேண்டியிருக்கும்.. யோகி ஆதித்யநாத் சவால்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் என்னை கட்டிப்பிடிக்கும் முன் யோசிக்க வேண்டும்- வீடியோ

    லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கட்டிப்பிடிக்கும் முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் பேசிய உரை பாஜகவினரை கலங்கடிக்க வைத்துள்ளது. இதனால் ராகுல் காந்தி இணையத்தில் வைரல், உலக அளவில் வைரலாகி உள்ளார்.

    Rahul Gandhi will think 10 times before hug me says Yogi Adityanath

    முக்கியமாக அவர் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்தது பலரை கவர்ந்தது. பலர் அந்த செயல் குறித்து இப்போதும் இணையத்தில் பேசி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இந்த கட்டிப்பிடி சம்பவம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்துள்ளார். அவர் ராகுல் காந்திக்கு இதனால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில், ராகுல் இன்னும் வளர வேண்டும். அவர் குழந்தை போல செயல்படுகிறார். இதுபோன்ற அரசியல் சாகசங்களை மக்கள் நம்ப கூடாது. இதை அனுமதிக்க கூடாது. எந்த ஒரு அறிவுள்ள மனிதரும் இன்னொரு நபரை இப்படி கட்டிப்பிடிக்க மாட்டார்.

    ராகுல் மோடியை எளிதாக கட்டிபிடித்துள்ளார். ஆனால் அவர் என்னை அப்படி கட்டிபிடிக்க முடியாது. என்னை கட்டிப்பிடிக்கும் முன் அவர் 10 முறையாவது யோசிக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

    English summary
    Rahul Gandhi will think 10 times before hug me says Yogi Adityanath.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X