உ.பி.. மீரட்டுக்குள் நுழைய முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்
மீரட்: உத்தரப்பிரதேசத்தின் மீரட்டுக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள் நடைபெற்றன. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
மீரட் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று அங்கு சென்றனர். டெல்லியில் இருந்து மீரட் நகருக்குள் காரில் செல்ல இருவரும் முயன்றனர்.
Congress leaders Rahul Gandhi and Priyanka Gandhi Vadra stopped outside Meerut by Police. They were on their way to meet families of those killed in violence that broke out during protests against #CitizenshipAmendmentAct pic.twitter.com/kYlbmpDNDI
— ANI UP (@ANINewsUP) December 24, 2019
ஆனால் மீரட் நகரில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி இருவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருவரும் காரிலேயே காத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.