உலகின் முதல் பயோ-வேக்கும் டாய்லெட் பிப்ருகார் ராஜதானி எக்ஸ்பிரசில் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-உலகின் முதல் பயோ-வேக்கும் டாய்லெட் பிப்ருகார் ராஜதானி எக்ஸ்பிரசில் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-நடப்பாண்டில் 475 ரயில் நிலையங்களில் 17000 கழிவறைகள் அமைக்கப்படும்-சுரேஷ் பிரபு
-400 ரயில் நிலையங்கள் அரசு- தனியார் கூட்டு மூலம் மேம்படுத்தப்படும்
-நடப்பாண்டில் 100 ரயில்வே நிலையங்களில் வைஃபை வசதி செய்யப்படும்-சுரேஷ் பிரபு
-அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 400 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி-சுரேஷ் பிரபு
-1 நிமிடத்திற்கு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை புக் செய்ய முடிந்த நிலையை மாற்றி 1லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் செய்ய வசதி ஏற்படுத்தியுள்ளோம்-சுரேஷ்பிரபு
-இவ்வாண்டில் 425 ரயில் நிலையங்களில் 17000 பயோ டாய்லெட் அமைக்கப்படும்-சுரேஷ் பிரபு
-இயக்கப்படும் ரயில் பெட்டிகளில் மாற்றம் கொண்டுவந்து 65 ஆயிரம் படுக்கை வசதியை புதிதாக ஏற்படுத்தியுள்ளோம்-சுரேஷ் பிரபு
-நடப்பாண்டில் ரயில்வே முதலீடு இரண்டு மடங்காக உயரும்
-ரயில்வேயை நவீனமயமாக்க 5 ஆண்டுகளில் ரூ8.5 லட்சம் கோடி செலவு செய்யப்படும்
-2020க்குள் அனைத்து ரயில்வே கிராசிங்குகளிலும் ஆட்கள் நியமனம்
-சோஷியல் மீடியாவில் புகார் பெற்று குறைகளை தீர்க்க முக்கியத்துவம் தருகிறோம்-சுரேஷ் பிரபு
-கடந்த ஆண்டு அறிவித்த 139 ரயில்வே திட்டங்களை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
-சுதந்திரம் அடைந்தது முதல் ஆண்டுதோறும் 200 கி.மீ. புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது
-இப்போது ரயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை 13.1 லட்சம்
-தினந்தோறும் ரயில்களில் 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர்
-ரயில்வே துறையின் வருமானத்தில் 67% சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கிறது
-ரயில்வே துறைக்கு இந்தாண்டு மத்திய அரசு ரூ. 40,000 கோடி வழங்கும்
-ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்ததால் கடந்த ஆண்டு ரூ. 30,000 கோடி இழப்பு
-அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.8.5 லட்சம் கோடி செலவிடப்படும்-சுரேஷ்பிரபு
-நடப்பு நிதியாண்டில் ரயில்வே வருவாய் 10 சதவீதம் அதிகரிக்கும்- சுரேஷ் பிரபு
-திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் அகல ரயில்பாதை அறிமுகப்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு
-ரயில் துறையை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி செலவிடப்படும்
-வருவாயை அதிகரிக்க புதிய வழிகள் கண்டறியப்படும்
-இந்த ஆண்டில் ரயில்வே வருவாய் 10% உயரும்
-இந்த ஆண்டில் 2,800 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்
-ரயில்வே திட்டங்களில் ரூ. 2 லட்சம் முதலீடு செய்ய எல்ஐசி முன்வந்துள்ளது
-நடப்பு நிதியாண்டில் 1600 கி.மீ தூரத்தை மின்வழிப்பாதையாக மாற்ற உள்ளோம்-சுரேஷ் பிரபு
-இதுவரை எந்த ஆண்டிலும் இவ்வளவு அதிகதூரம் மின்வழிப்பாதையாக மாற்றப்படவில்லை
-முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் கடந்த நிதியாண்டில் இரட்டை வழிப்பாதை திட்டம் 30 சதவீதம் அதிகம்-சுரேஷ்பிரபு
-இந்த நிதியாண்டில் 2800 கி.மீ தூரம் இரட்டை வழிப்பாதையாக மாற்றப்படும்-சுரேஷ் பிரபு
-ரயில்களின் நேரம் தவறாமை 95% ஆக உயர்ந்துள்ளது
எக்ஸ்பிரஸ் ரயில்கள் 50 கி.மீ, சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள் 80 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகின்றன
-ரயில்வேயில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதல்முறையாக பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளேன்-சுரேஷ் பிரபு
-1.21 லட்சம் கோடி செலவிலான மூலதன திட்டங்கள் தயாராக உள்ளது-சுரேஷ் பிரபு
-மோடியின் கனவை நனவாக்கும் வகையில் ரயில்வே துறை மேம்படுத்தப்படுகிறது-சுரேஷ் பிரபு
-நாடாளுமன்றத்தில் 2016-17ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் உரையை தொடங்கினார் அமைச்சர் சுரேஷ்பிரபு