ரயில்வே பட்ஜெட் 2016
-ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிமுகம் இல்லை
-ரயில்வேயில் பொறியியல் மாணவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் முறை அறிமுகம்
-ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டண உயர்வும் அறிவிக்கப்படவில்லை
-ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை
-அனைத்து மாநில மொழிகளிலும் "ரயில் பந்து" பத்திரிகை வெளியிட நடவடிக்கை
-அடுத்து வரும் ரயில்நிலையங்களை அறிவதற்கான ஜிபிஎஸ் வசதி பெட்டிகளில் அறிமுகப்படுத்தம்
-பெண் பயணிகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-உள்ளூர் உணவுகள் பயணிகளுக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
-2020ஆம் ஆண்டுக்குள் ரயில்வே வருவாயை ரூ4,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை
-தமிழகம், குஜராத், தெலுங்கானா அரசுகளுடன் இணைந்து புறநகர் ரயில்களை அதிகரிக்க நடவடிக்கை
-இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் ரயில்வே ஆட்டோ-ஹப் உருவாக்கப்படும்-சுரேஷ் பிரபு
-டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்
-சென்னை, ஹைதராபாத், அகமதாபாத்தில் புற நகர் ரயில் சேவை மேம்படுத்தப்படும்-சுரேஷ் பிரபு
-ரயில்வே உணவு மெனுவில் குழந்தைகளுக்கான உணவு, சூடான பால் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ரயில் பயணிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வசதி
-ரயில் பெட்டிகளில் எஃப்.எம். ரேடியோ வசதி ஏற்படுத்தப்படும்
-ரயில் பயணிகளுக்கு டிராவல் இன்சூரன்ஸ் வழங்குவது பற்றி ஆலோசனை
-2ஆயிரம் ரயில் நிலையங்களில் 20,000 மெகா திரைகள் அமைக்கப்படும்
-பயண சீட்டை ரத்து செய்ய 139 எண்ணில் அழைக்கலாம்
-இ கேட்டரிங் சேவை 408 ரயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
-மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ்படுக்கைகள் ஒதுக்கீடு
-மாநில அரசுடன் இணைந்து பெங்களூர், திருவனந்தபுரத்தில் புறநகர் ரயில் சேவை-சுரேஷ் பிரபு
-லக்கேஜ் தூக்கும் தொழிலாளிகள் இனிமேல் கூலி கிடையாது. சகாயகாஸ் என அழைக்கப்படுவர்-சுரேஷ்பிரபு
-ஆட்டோமெட்டிக் கதவுகள், பார்கோட் ரீடர், பொழுதுபோக்கு டிவி ஸ்க்ரீன் வசதியோடு ஸ்மார்ட் கோச்சுகள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-ஜப்பான் உதவியோடு அகமதாபாத்-மும்பை நடுவே அதிவிரைவு ரயில் திட்டம்-சுரேஷ் பிரபு
-பார்கோடு தொழில்நுட்பத்துடன் ரயில் டிக்கெட்டுகள் அறிமுகம்
-நாகப்பட்டிணம், வேளாங்கன்னி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களை இணைக்க ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-முழுவதுமே 3வது ஏசி வசதி பெட்டி கொண்ட ஹும்சபார் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-அதிக பயணிகள் நெரிசல் உள்ள வழித்தடங்களில் இரவு நேர டபுள்-டக்கர் ரயில்கள் அறிமுகம்-சுரேஷ் பிரபு
-நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத சூப்பர்பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படும்
-பெண்களுக்கு லோயர் பெர்த்துகள் வழங்க கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்
-மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்துகள் 50% ஒதுக்கீடு
-டெல்லி- சென்னை உள்ளிட்ட சரக்குபாதை திட்டத்தை நிறைவேற்ற முன்னுரிமை
-குஜராத்தின் வதேராவில் உள்ள ரயில்வே அகாடமி ரயில்வே பல்கலைக் கழகமாக மாற்றம்