நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் உள்ளது... ரயில்வே பட்ஜெட்டுக்கு மோடி பாரட்டு
டெல்லி: புதிய ரயில்வே பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தப் புதிய அரசு பதவி ஏற்ற பின்பு 2014-15-ம் ஆண்டுக்கான முதல் ரயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா.
அதில் பல புதிய ரயில்கள் மற்றும் பல ரயில்களின் தூர நீட்டிப்பு போன்றவை அறிவிக்கப் பட்டுள்ளன. இப்புதிய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது., உண்மையான இந்திய ரயில்வே பட்ஜெட் இது. ரயில்வே துறையில், வெளிப்படைத்தன்மை ஒருங்கிணைப்பு மேம்படுத்தபடும். மக்களின் குறைகளையும் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சதனாந்த கவுடாவின் ரயில்வே பட்ஜெட் நவீனமயானது' எனத் தெரிவித்துள்ளார்.