For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவின் மிகப்பெரிய ஜோக்கர் ‘ராஜ் தாக்கரே’ தான்: ராம்தாஸ் அதவாலே

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரிய ஜோக்கர் ராஜ்தாக்கரே தான் எனத் தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதவாலே.

மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு உல்ஹாஸ் நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான குமார் அய்லானியை ஆதரித்து இந்திய குடியரசு கட்சித் தலைவர் ராம்தாஸ் அதவாலே நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

Raj Thackeray is biggest joker of Maharashtra: Ramdas Athavale

அப்போது துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறி மகாராஷ்டிரா நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே தன்னை வைத்து காமெடி செய்து வருவதாக கூறிய அவர், மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே தான் மிகப்பெரிய ஜோக்கர் எனத் தெரிவித்தார்.

மேலும், மகாராஷ்டிராவில் முதல்வராக ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டால், மாநிலம் தீப்பற்றி எரியும் என்றும், அப்போது நான் தான் தண்ணீரை கொண்டு வந்து அதை அணைப்பேன் என்றும் ராம்தாஸ் கூறினார்.

தங்கள் கட்சி இத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறித்து உத்தவ் தாக்கரேயின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்த ராம்தாஸ், ‘தனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக சேனா கூறியது,. ஆனால் பாஜக.கூட்டணியை விட்டு சென்ற பிறகு இவர்கள் எப்படி ஆட்சியை பிடிப்பார்கள் என்பதே எனது கேள்வி எனக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

English summary
The RPI (Republican Party of India) leader Ramdas Athavale targeted to MNS chief Raj Thackeray in Ulhasnagar saying he joking on me but he is biggest joker in Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X