ராஜஸ்தானில் அடுத்தடுத்து ஷாக்.. பாஜக எம்.பி. காங்கிரஸுக்குத் தாவினார்!
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில பாஜகவுக்கு முக்கியமான பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் காங்கிரஸ் கட்சியில் போய்ச் சேர்ந்து விட்டார்.
ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன. இதனால் பாஜக கூடாரம் கலகலத்துப் போய்க் காணப்படுகிறது.
சமீபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் கட்சி தாவி காங்கிரஸுக்குப் போனார். இந்த நிலையில் தற்போது முக்கியமான எம்.பி. ஒருவர் கட்சி தாவி விட்டார்.
[ஹரிஷ் சந்திரா மீனா பயோகிராபி]
ராஜஸ்தானின் தாசா தொகுதி எம்.பி. ஹரிஷ் மீனா. இவர் முன்னாள் டிஜிபி ஆவார். இவர் இன்று திடீரென காங்கிரஸ் கட்சிக்கு மாறி விட்டார். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டைச் சந்தித்து அவர் முன்னிலையில் இவர் காங்கிரஸில் இணைந்தார்.
[ரஜினி பாஜக பக்கம் சாய்ந்து விட்டார்.. அப்ப அதிமுக கதி??]
ஹரிஷ் மீனாவின் கட்சி தாவல் பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. பாஜகவுக்கு தேர்தலுக்கு முன்பு அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருவதால் தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.