மூளையில் ரத்த கசிவு.. ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் காலமானார்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் பன்வர்லால் மெஹ்வால் இன்று காலமானார்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வர்லால் மெஹ்வால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று இருக்கும் பான்வர்லால் மெஹ்வால், சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ளார்.
ராஜஸ்தானின் சுஜன்கார்க் சுரு தொகுதியில் இருந்து இவர் அமைச்சராக தேர்வானார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், மூளையில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்தார். ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இவரின் உடல்நிலை இன்று காலை மோசம் அடைந்தது.
இந்த நிலையில் இன்று பான்வர்லால் மெஹ்வால் சிகிச்சை பலனின்றி காலமானார். அமைச்சர் பான்வர்லால் மெஹ்வால் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாளை ராஜஸ்தானில் இதற்காக அரசு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.