அப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை.. ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் உருக்கம்
காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது.
Recommended Video
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுகொல்லப்பட்ட ராணுவ வீரர் முகுத் பிகாரி மீனாவின் இறுதி சடங்கு இரண்டு நாள் முன்பு நடந்தது. முகுத் பிகாரி மீனாவின் 5 மாத குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்து வருகிறது. குப்வாரா தொடர்ந்து திடீரென்று இந்திய ராணுவ தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக அடிக்கடி நிறைய தீவிரவாதிகள் கொல்லப்படுகின்றனர்.இந்த தாக்குதலில் சமயங்களில் சில ராணுவ வீரர்களும் இறந்து இருக்கின்றனர்.
|
பரிதாப பலி
இந்த நிலையில் கடந்த வாரம் குப்வாரா காட்டிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். ராஜஸ்தானின் ஜாலாவர் கிரமாத்தை சேர்ந்த முகுத் பிகாரி மீனா பரிதாபமாக பலியானார். அதேபோல் இரண்டு தீவிரவாதிகள் இதில் படுகாயம் அடைந்தனர்.
|
இறுதி சடங்கு நடத்தினார்கள்
அவரது உடலுக்கு சொந்த கிராமத்தில் இருந்து சடங்கு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அவருக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. 5 மாத குழந்தை ஒன்றும் இருக்கிறது.
|
வைரல் புகைப்படம்
இந்த நிலையில், அந்த 5 மாத பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த குழந்தை அப்பா இறந்தது கூட தெரியாமல், சவப்பெட்டி மீது, உட்கார்ந்து இருக்கிறாள். பின் தூக்கம் வந்த அவள் அப்படியே பெட்டியின் மீதே படுத்துவிடுகிறாள். இந்த புகைப்படம் இணையம் முழுக்க வெளியாகி மக்களை உறைய செய்துள்ளது.
|
கடிதம் எழுதினார்
இந்த நிலையில் அந்த பெண் குழந்தைக்கு, ஜாலாவர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்தர் சோனி கடிதம் எழுதியுள்ளார். அதில் ''உன்னை பார்க்கும் போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. நீ அந்த சவப்பெட்டியில் இந்திய கொடியின் மீது அமர்வதற்கு முன்புதான் உன் தந்தையின் முகத்தை பார்த்தாய்.அது அங்கு இருந்த எல்லோருக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்தது. நீ பெரிய பெண்ணாக வளர வேண்டும். உன்னுடைய அப்பா பெருமையடையும் வகையில் நீ வாழ வேண்டும்'' என்றுள்ளார்.