"டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை"
டெல்லி: டெல்லியில் எந்த அரசியயல் நிகழ்விலும் ரஜினி பங்கேற்கவில்லை என ரஜினி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாள் முதல் அவர் பாஜக ஆதரவாளர் என்ற கருத்து நிலவி வருகிறது. பெரும்பாலான விஷயங்களுக்கு அவர் கண்டிக்காதது இதை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்றைய தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். இதனால் அவர் பாஜகவுடன் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட போகிறார் என்ற தகவல்கள் பரவின.
இதைத் தொடர்ந்து ரஜினியின் செய்தித் தொடர்பாளர் அகமது கூறுகையில் டெல்லியில் எந்த அரசியல் நிகழ்விலும் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை.
'பேட்ட' படப்பிடிப்புக்காக லக்னோவுக்கு டெல்லி வழியாக விமானத்தில் மட்டுமே ரஜினிகாந்த் சென்றார் என்றார். விமானம் மூலம் லக்னோ சென்ற ரஜினி 40 பவுன்சர் பாய்கள் புடைச்சூழ சென்றார்.
அவர்கள் ரஜினியுடன் சூட்டிங் முடியும் வரை அங்கேயே தங்கியிருப்பர். அங்கு ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்பட்டுள்ளது. ரஜினியுடன் சிம்ரன், பாபி சின்ஹா உள்ளிட்டோரும் படப்பிடிப்புக்காக சென்றுள்ளனர்.