ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
Recommended Video
டெல்லி: ரஜினிகாந்துக்கு திரைப்படத் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவாவில் நவ.20 முதல் 28 வரை 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் ரஜினிக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து ரஜினிகாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்படுவதை மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். இந்த விருதானது மிகவும் பெரிய விருதாக பார்க்கப்படுகிறது.
In recognition of his outstanding contribution to Indian cinema, during the past several decades, I am happy to announce that the award for the ICON OF GOLDEN JUBILEE OF #IFFI2019 is being conferred on cine star Shri S Rajnikant.
— Prakash Javadekar (@PrakashJavdekar) November 2, 2019
IFFIGoa50 pic.twitter.com/oqjTGvcrvE
இதுகுறித்து பிரகாஷ் ஜாவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய திரைத்துறைக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது எனப்படுவது பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் விருதாகும்.
ஒதுக்கி வைக்கலை.. உசரத்துக்கு போக போறார்.. துரைமுருகனுக்கு புதிய மகுடம்.. தயாராகிறது திமுக!