நிதி ஆயோக் துணை தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் நியமனம்!
நிதி ஆயோக் துணை தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: நிதி ஆயோக் துணை தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜிவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார்.
துணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய-அமெரிக்கரான பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளாக நிதி ஆயோக் அமைப்பின் பணிகளை கவனித்து வந்த அரவிந்த் பனகாரியா, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தன்னை பதவியில் இருந்து விடுவிக்கும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அவரது ராஜினாமாவை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், நிதி ஆயோக் அமைப்புன் புதிய துணைத்தலைவராக பொருளாதார வல்லுநர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவரான வினோத் பால், நிதி ஆயோக்கின் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.