அவை தலைவர் இருக்கையை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் எம்.பிக்கள்.. ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால், ராஜ்யசபா நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, தெலுங்கு தேசம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து தர்ணாக்கள் நடத்தி வருகிறார்கள். காவிரிக்காக அதிமுக எம்.பிக்கள் தர்ணா ணா நடத்தி வருகிறார்கள். இதனால் இரு அவைகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
ராஜ்யசபாவில் இன்றும் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் தர்ணா நடத்தினர். பதாகைகளை எடுத்துக்கொண்டு ராஜ்யசபா தலைவர் வெவங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவை நாளை வர ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே, ராஜ்யசபா எம்.பிக்களுக்கு வெங்கையா நாயுடு இன்று அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவையை தொடர்ந்து முடக்கி வருவதால் விருந்து ரத்தாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.