வங்கிக்கு ஒரு பிகினி அழகி, கடன் தீர்ந்துவிட்டது: விஜய் மல்லையாவுக்கு ராம்கோபால் வர்மா அட்வைஸ்
ஹைதராபாத்: தொழில் அதிபர் விஜய் மல்லையா பிகினி அணிந்த அழகிகளை ஒவ்வொரு வங்கிக்கும் அளித்து கடனை அடைத்துவிடலாம் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறி வங்கிகள் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா மல்லையாவுக்கு கடனை அடைக்க வழி கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
பிகினி அழகிகள்
விஜய் மல்லையா தான் கடன் வாங்கியுள்ள வங்கிகளுக்கு தனது சொந்த வங்கியில் இருந்து வங்கிக்கு ஒரு பிகினி அழகியை அளித்தால் கடன் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.
|
வங்கிகள்
விஜய் மல்லையாவின் பிகினி திட்டத்தை வங்கிகள் ஏற்காது. ஆனால் வங்கி அதிகாரிகள் ஏற்கக்கூடும்.
|
செக்யூரிட்டி
விஜய் மல்லையாவின் பிகினி அழகிகள் வங்கிகளுக்கு அளித்த செக்யூரிட்டியில் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்று கருதுகிறேன். அதனால் வங்கி அதிகாரிகள் புகார் கூறக் கூடாது.
|
தீபிகா
வங்கி அதிகாரிகள் கடன் அளிக்க ஒப்புக் கொண்டதற்கு மல்லையாவின் கேலண்டர் கேர்ள்ஸான தீபிகா படுகோனே, நர்கிஸ் ஃபக்ரி, இஷா குப்தா, கத்ரினா கைஃப் உள்ளிட்டோர் காரணம் என நினைக்கிறேன்.