ராமர் கோவிலை கட்டினால் ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிச்சுடலாம்... சொல்வது வி.ஹெச்.பி. தொகாடியா
ஜபல்பூர்: அயோத்தியில் ராமர் கோவிலை கட்டினால் ஐ.எஸ். தீவிரவாதிளை தோற்கடித்துவிடலாம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் செய்தியாளர்களிடம் பிரவீன் தொகாடியா கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதன் மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடித்துவிட முடியும். இந்தியா ஒரு சிரியாவாக உருவாவதை தடுத்து விட முடியும்.
ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் உதவியாக இருக்கும். ஆகையால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தியாவில் இந்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்துக்களின் கோரிக்கைகளை யாரும் செவிகொடுத்து கேட்பாரில்லை.
இவ்வாறு தொகாடியா கூறியுள்ளார்.
அயோத்தியில் கோவில் கட்ட பிரதமர் மோடி சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப் போவதாகக் கூறிக் கொண்டு கற்களை கொட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.