"பிசினஸ்மேன்" ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடைவிதிக்கனும்...'நாக்குவெட்டி' வேதாந்தி
அயோத்தி பிரச்சனையில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தலையிட ராம்விலாஸ் வேதாந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
லக்னோ: அயோத்தி விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலையிட தடை விதிக்க வேண்டும் என பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி வலியுறுத்தியுள்ளார்.
அயோத்தி பிரச்சனை தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அண்மையில் சந்தித்து பேசினார். இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரவிசங்கர் மீது பாய்ச்சல்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் எம்.பி. ராம் விலாஸ் வேதாந்தி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பிசினஸ்மேன்... அவர் தலையிட்டால் எப்படி பிரச்சனை சரியாக இருக்கும்?
ரவிசங்கரை ஏற்க முடியாது
ரவிசங்கர் என்ன சந்த் சமாஜ், ஆர்.எஸ்.எஸ், விஹெசி அல்லது பாஜகவை சேர்ந்தவரா? யார் அவர்? அவரது தலையீட்டை நாங்கள் யாரும் ஏற்கவில்லை.
தலையிட தடை தேவை
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு ராம்விலாஸ் வேதாந்தி கூறினார்.
கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்
இந்த வேதாந்திதான் திமுக தலைவர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் வெட்டினால் எடைக்கு எடை தங்கம் தருவேன் என பேசி நாடு முழுவதும் பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதையடுத்தே 'நாக்குவெட்டி' வேதாந்தி எனவும் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.