கரீனா கபூருடன் செல்பி எடுத்து பஞ்சாயத்தில் சிக்கிய சத்தீஸ்கர் பா.ஜ.க. முதல்வர் ரமண்சிங்
ராய்பூர்: பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங்.
சத்தீஸ்கரின் தலைநகர் ராய்ப்பூரில் யூனிசெப் அமைப்பு, மாநில பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து குழந்தைகள் உரிமை குறித்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருந்தது.
Chief Minister, Chattisgarh Raman Singh joins Celebrity Advocate Kareena for celebrating culmination of #CRCWeek pic.twitter.com/SOnCi031YT
— UNICEF India (@UNICEFIndia) November 20, 2015
இந்த நிகழ்ச்சிக்கு யூனிசெப் சிறப்பு தூதர் பாலிவுட் நடிகை கரீனா கபூர் அழைக்கப்பட்டிருந்தார். இதில் மாநில முதல்வர் ரமண்சிங்கும் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது கரீனா கபூர் அருகே அமர்ந்திருந்த முதல்வர் ரமண்சிங் அவருடன் சேர்ந்து செல்பி எடுப்பதில் பிசியாக இருந்தார். இது இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் பூபேஸ் பகெல், மாநிலத்தில் வறட்சி தாண்டவமாடி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைப் பற்றி கவலைப்படாத முதல்வர் ரமண்சிங் நடிகையுடன் செல்பி எடுத்துக் கொண்டிருப்பதா? என்றார்.