For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!

Google Oneindia Tamil News

ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 4-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிபிடத்தக்கது.

Ranchi court has granted bail to Lalu Prasad Yadav in the fourth case of fodder scam case

ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருந்து வருகிறார். பீகார் முதலமைச்சராக இருந்த போது 1990களில் தும்கா கருவூலத்தில் 3 கோடியே 13 லட்சம் ரூபாயை மோசடி செய்ததற்காக மொத்தமுள்ள 4 வழக்குகளில் லாலு பிரசாத்திற்கு ஏறக்குறைய 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையே உடல்நலகுறைவு ஏற்பட்டதால் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் லாலு பிரசாத் யாதவ். மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் 4-வது வழக்கான தும்கா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவ்வுக்கு உத்தரகண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.அவர் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Ranchi court has granted bail to Lalu Prasad Yadav in the fourth case of cattle feed scam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X