மாட்டு கொட்டகையில் "பசுவுடன்".. அதிகாலை 4 மணிக்கு.. அதிர வைத்த 55 வயசு தாத்தா.. கொந்தளித்த மக்கள்
போபால்: பசுவுடன் உடலுறவு கொண்டுள்ளார் ஒரு தாத்தா.. அந்த தாத்தாவுக்கு வயசு 55.. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சுந்தர் நகரில் ஒரு பால் பண்ணை இயங்கி வருகிறது.. அங்கிருக்கும் மாட்டுக் கொட்டகையில் கடந்த 4 தேதி விடிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.. 55 வயசுள்ள அந்த நபர் விடிகாலை 4 மணி இருக்கும், இந்த கொட்டகைக்குள், அங்கிருந்த ஒரு பசுவுடன் உறவு கொள்கிறார்.. இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகியுள்ளது.
இந்த தாத்தாவுக்கு இதுதான் பொழப்பாம்.. ஏற்கனவே ஒருமுறை பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டதை அந்த பகுதி மக்கள் கண்ணெதிரே பார்த்துவிட்டனர்.. ஆவேசமடைந்த அவர்கள், கையும் களவுமாக பிடித்து வார்ன் செய்தும் அனுப்பி உள்ளனர்..
அதற்கு பிறகும் இந்த காரியத்தில் இவர் இறங்கி உள்ளார்.. அந்த சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்து போன மக்கள், மறுபடியும் தாத்தாவை கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவர், நவாப்கஞ்சின் கோண்டா பகுதியில் வசித்து வருபவராம்.. பெயர் ராஜ்குமார்.
இந்த மாட்டுக் கொட்டகைக்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.... பசுவுடன் உறவு கொண்டுள்ளார்.. இவர் கடந்த மே மாசம் அயோத்தியில் உள்ளூர் கால்நடை தங்குமிடத்தில் தங்கியிருந்த பல மாடுகளையும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. இதுகுறித்து ஏஎன்ஐ செய்திக்கு அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் ஸ்ரீவாஸ்தவா சொல்லும்போது, "ராஜ்குமார் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
ரவுடி விகாஸ் துபே கூட்டாளி சுட்டுக் கொலை... பாஜக எம்எல்ஏவை சந்தித்த விகாஸ்.. என்ன நடக்கிறது உபியில்!