ஏ.டி.எம்மில் எலி செய்த டிமானிடைசேஷன்.. ரூ.12 லட்சம் பணம் நாசமானது!
கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது.
Recommended Video
கவுகாத்தி: கவுகாத்தியில் உள்ள ஏடிஎம் ஒன்றில், எலி ஒன்று புகுந்து அதில் இருந்த பணம் எல்லாவற்றையும் கடித்து குதறி உள்ளது.
அசாம் அருகே இருக்கும் கவுகாத்தி டின்சுகியா பகுதி ஏடிஎம்மில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் பணத்தைதான், வெளிநாடு தப்பித்து செல்லும் வியாபாரி போல எலி நாசம் செய்துள்ளது.
இந்த ஏடிஎம் வேலை செய்யாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டு இருந்துள்ளளது. ஆனால் அதில் இருந்த பணம் அப்படியே இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த ஏடிஎம் எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கி ஊழியர்கள், ஏடிஎம்மை சரிசெய்ய, அதை பிரித்து இருக்கிறார்கள். அப்போதில் அதில் இருந்து பணம் கிழிந்து, மொத்தமாக கொட்டி இருக்கிறது. பணம் எல்லாவற்றையும் எலி கடித்து குதறி இருக்கிறது.
உள்ளே இருந்த 500, 2000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் நாசமாகி உள்ளது. இதனால் 12 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது. இதனால் டின்சுகியா போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எலியை எப்படி விசாரிப்பார்கள் என்ற குழப்பம் நிலவுகிறது.