For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.ஆர்.ஐ-களுக்கு சிறப்பு சலுகை.. மார்ச் 31 வரை பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை ரூபாய் நோட்டுககளை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். மேலும் தங்களிடம் உள்ள அந்த மதிப்பிலான நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும், ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

RBI extended time to change the old notes for NRI

மேலும் அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நவம்பர் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்கள் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த இந்தியர்கள் ஆகியோர் நோட்டுகளை மாற்றிக் கொள்ள இயலாமல் போனது. ஆகவே அவர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி வாய்ப்பு வழங்கியுள்ளது.

English summary
The NRI can change the old currency notes till March 31, says Reserve Bank of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X