For Daily Alerts
Just In
கார், வீடு உள்ளிட்ட கடன் தவணைகள் செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம்: ரிசர்வ் வங்கி
கடன் தவணைகள் செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை: கார், வீடு உள்ளிட்ட கடன்களின் தவணைகளை செலுத்த 60 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நவ.8-ல் அறிவித்தார். இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் தனிநபர், வீடு மற்றும் கார் கடன் ஆகியவற்றின் தவணையை செலுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை அடுத்தே தற்போது வீடு, வேளாண், கார் கடன்களுக்கான தவணைகளை செலுத்த கூடுதலாக 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது ரிசர்வ் வங்கி.
நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கடனுக்கான தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் கடன், வீட்டுக் கடன், பயிர்க் கடன், கார் மற்றும் வாகனக் கடன் ஆகியவற்றுக்கு இச் சலுகை பொருந்தும்.
English summary
RBI provided the additional 60 days for repayment of housing, car, farm and other loans worth up to Rs 1 crore.
Story first published: Monday, November 21, 2016, 22:58 [IST]