புதிய ரூ.50 நோட்டுக்களை அறிமுகம் செய்தது ஆர்.பி.ஐ! புழக்கத்திலுள்ள நோட்டுக்கள் என்னவாகும் தெரியுமா?
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.50 வகை ரூபாய் நோட்டுகளை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு அறிமுகமாகும் 3வது வகை ரூபாய் நோட்டு இதுவாகும்.
ஏற்கனவே ரூ. 2,000 மற்றும் ரூ.500 ஆகிய மதிப்புகளில் புது ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய ரூ.50 நோட்டு 66 மிமீ x 135 மிமீ பரப்பு கொண்டதாக இருக்கும், மேலும் ஒருபக்கம் ஹம்பி ரதம் புகைப்படமும், ஒருபக்கம் மகாத்மா காந்தியடிகள் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.
#RBI to launch new Rs 50 currency notes. All the other Rs 50 banknotes issued by RBI will remain legal tender. pic.twitter.com/N2iUxszmCW
— Shivani Bazaz (@shivanibazaz) August 18, 2017
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் ஆர். படேலின் கையொப்பத்துடன் இந்த நோட்டுகள் அறிமுகமாகியுள்ளது. நீல வண்ணத்தில் இந்த நோட்டு உள்ளது. அதேநேரம், தற்போது புழக்கத்திலுள்ள பழைய ரூ.50 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.