என்னதிது.. நடு ரோட்டுல வெள்ளையா.. பேயா இருக்குமோ.. நானே வருவேன்.. கேரள காட்டிலிருந்து ஒரு அலறல்!
வயநாடு அருகே 8 அடி உயர வெள்ளை உருவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Recommended Video
வயநாடு: "அது என்ன வெள்ளையா ஒரு உருவம்.. இப்படி நகர்ந்து போகுதே.. பேயா, பிசாசா?" என்ற கேள்வி கேரளாவையும் தாண்டி மக்களை அச்சத்துடன் கேள்வி எழுப்பி வருகிறது.
பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு நமக்கு எந்த யுகத்திலும் பதில் கிடைக்க போவது இல்லை. ஒரு பக்கம் விஞ்ஞானம் இல்லை என்கிறது.. மறுபக்கம் அதற்கான சாட்சிகள் ஏதாவது ஒரு ரூபத்தில் நடமாடி கொண்டே இருக்கிறது.
இப்போதும் ஒரு உருவம் நம் பார்வைக்கு வந்துள்ளது. இது கேரள மாநிலம் வயகாட்டில் நடந்துள்ளது சம்பவம். பொதுவாக, பில்லி, சூனியம், மாந்திரீகம் போன்றவைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் கேரள மாநிலத்தினர். சில சமயம், இங்குள்ள பகுதிகளில் ஆங்காங்கே பேய் நடமாட்டம் இருப்பதாக கூட செய்திகள் வெளிவருவது உண்டு.
அந்த வகையில், வயநாட்டில் பய்யாவூர் என்ற இடத்தில் ஒரு அமானுஷ்ய பெண் ரூபத்தின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
அது ஒரு ராத்திரி நேரம்.. பய்யாவூர் என்ற இடத்தில் செங்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அந்த வண்டியில் கேமராவும் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரெண்டு பக்கமும் மரங்கள், செடிகள், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன.
குறுகலான தெருபோல, மண் சாலை உள்ளது. லாரியில் 2 பேர் பேசிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் ஒரு வெள்ளை உருவம் திடீரென அந்த பக்கம் புதருக்குள் இருந்து வெளியே வருகிறது. 8 உயரத்துக்கு அந்த உருவம் உள்ளது.
அமானுஷ்ய பெண் உருவம் அது.. முழுக்க முழுக்க வெள்ளை உருவம்.. தலையை காணோம்.. மொத்தமாக வெள்ளை துணி போர்த்தியபடி உள்ளது. அந்த துணி மண்ணெல்லாம் புரண்டு வருகிறது. வெளிச்சம் பளிச்சென வீசுகிறது. ஒரு லாரி வருகிறதே என்றெல்லாம் தெரியவில்லை.. கூலாக அந்த பக்கத்தில் இருந்து மண் சாலையை கடந்த இந்த பக்கத்தில் நடந்து போகிறது.
இது பேயா, பிசாசா என்று தெரியவில்லை. இந்த வீடியோதான் வைரலாகி.. பீதியை கிலோ கணக்கில் கிளப்பி விட்டு கொண்டிருக்கிறது.