ரெட் அலெர்ட்.. வேகமாக நிரம்பும் ராட்சச இடுக்கி ஆர்க் அணை.. இன்று திறக்க வாய்ப்பு?
கேரளாவில் உள்ள இடுக்கி அணை, இன்று திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
இடுக்கி: கேரளாவில் உள்ள இடுக்கி அணை, இன்று திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆசியாவின் பெரிய ஆர்க் அணை என்ற பெருமையை பெற்று இருக்கிறது இடுக்கி அணை. இந்த பெரிய அணை தற்போது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைத்து இருக்கிறது.
இதனால் அந்த அணை இன்று இரவு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் மழையால் அணை திறக்கப்பட உள்ளது.
இடுக்கி
கேரளாவில் இடுக்கியில் தண்ணீர் தேவைக்காகவும், மின்சார தேவைக்காகவும் இடுக்கி அணை 1960களில் கட்டப்பட்டது.குறவன் குறத்தி என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இரண்டு ராட்சச மலைகளுக்கு இடையில் இந்த அணை கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவில் இருக்கும் மிகப் பெரிய ஆர்க் அணைகளில் ஒன்றாகும்.
பெரிய மழை
அங்கு மிகவும் மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்யும் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன் சில மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது இடுக்கி அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவு பெய்த மழையில் இடுக்கி வேகமாக நிரம்பி கொள்ளவை அடையும் நிலையில் உள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட்
இதன் முழு உயரம், 2,403 அடியாகும். தற்போது 2,395 அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. இதனால் தற்போது அங்கு ஆரஞ்சு அலெர்ட் எனப்படும், பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்கு பின் அங்கு இந்த எச்சரிக்கை விடப்படுகிறது.
இன்று
ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்ட சில நாட்களில் ரெட் அலெர்ட் விடப்படும். இன்று அதன்படி ரெட் அலெர்ட் விடப்பட வாய்ப்புள்ளது. 2,399 அடியை எட்டியதும் ரெட் அலெர்ட் விடப்படும். அதனால் இன்று அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதை பார்க்கக் அங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வருகிறார்கள். கடைசியாக 1992ல் அணை நிரம்பி திறக்கப்பட்டது. அதன்பின் 26 வருடங்கள் கழித்து இப்போதுதான் அணை திறக்கப்பட உள்ளது.