For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுதந்திர தின இனிப்புகளை உண்ட 48 மருத்துவர்கள் உடல்நலம் பாதிப்பு!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது வழங்கப்பட்ட இனிப்புகளை உண்ட 48 மருத்துவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள சியோன் பகுதியில் அமைந்துள்ள லோக்மான்யா திலக் அரசு மருத்துவமனையில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கோலிவாடாவில் உள்ள மிட்டாய்க் கடையில் இருந்து இனிப்புகள் வாங்கப்பட்டு அங்குள்ள மருத்துவர்களுக்கு விநியோகித்தனர்.

அப்போது அந்த இனிப்புகளை உண்ட 24 பெண் மருத்துவர்கள் உள்பட 48 மருத்துவர்களுக்கு வாந்தி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இனிப்புகள் காலவதியானதா, அல்லது வேறேதும் அலர்ஜியா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

English summary
Forty eight resident doctors of Lokmanya Tilak MunicipalGeneral Hospital and Medical College (LTMGH) located in Sion, have fallen ill after consuming sweets on the occasion of Independence Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X