எல்லோரும் உள்ளே செல்லுங்கள்.. காஷ்மீரில் ராணுவம் மீண்டும் கட்டுப்பாடு.. பக்ரீத் அன்றும் பதற்றம்!
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட விடாமல் ராணுவம் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது.
இதனால் காஷ்மீரில் கடந்த வாரம் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இப்போதும் காஷ்மீர் எல்லையில் அதிக அளவில் ராணுவம் நிறுத்தப்பட்டு வருகிறது.
கொஞ்சம்
கட்டுப்பாடுகளுக்கு இடையில் நேற்று மாலை காஷ்மீரில் சில கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இன்று பக்ரீத் என்பதால் நேற்று மாலை சில கடைகளை திறக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் கடைகளில் நேற்று மக்கள் அதிக அளவில் கூடி பொருட்களை வாங்கி சென்றனர்.
நேற்று மாலை
ஆனால் நேற்று மாலையே சில மணி நேரத்தில் கடைகளை மூட போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். நேற்று மாலை 7 மணிக்கு மேல் காஷ்மீர் மீண்டும் மிகவும் அமைதியான நிலைக்கு திரும்பியது. அங்கு நேற்று இரவு முழுக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.
ராணுவம் குவிப்பு
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் மீண்டும் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கில் ராணுவத்தினர் மீண்டும் ரோந்து பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். மக்களை வீட்டிற்குள் உள்ளே செல்லும்படி அவர்கள் ஒலிபெருக்கிகளில் அறிவித்து வருகிறார்கள்.
கடைகள் மூடப்பட்டது
அதேபோல் கடைகளை மூடும்படியும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிக முக்கியமான பண்டிகையாக பக்ரீத் பண்டிகை பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றும் கூட மக்களை ராணுவத்தினர் இப்படி நடத்துவது காஷ்மீரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.