ஒரே பதவி- ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை!
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராடிய முன்னாள் ராணுவ வீரர் கிஷன்கிரிவால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லி: முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டம் நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் டெல்லி ஜந்தர் மந்தரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலின் போது, ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என மத்திய பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முன்னாள் ராணுவத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் நடத்தி வந்தார்.
அண்மையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி இருந்தார். இதனிடையே டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் ராணுவ வீரர் கிஷான் கிரிவால் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.