For Daily Alerts
Just In
தனியார் நிதி நிறுவன காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கி 14 கிலோ தங்கம் கொள்ளை
தனியார் நிதி நிறுவனத்தில் 4 மதிப்புள்ள 14 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் காவலாளியை இரும்பு கம்பியால் தாக்கி, 14 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
அகமதாபாத், நவரங்கபுரா பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் புகுந்து, அங்கிருந்த காவலாளியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். பின்னர் வங்கி லாக்கரை உடைத்து அதில் இருந்த 14 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை போன தங்கத்தின் மதிப்பு ரூ.4 கோடி இருக்கும் என்று தெரிகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Comments
English summary
Two unidentified men on Saturday looted gold bars weighing 14 kilograms after attacking a security guard of cash logistic company in Ahmedabad.
Story first published: Sunday, November 27, 2016, 3:54 [IST]