For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி அஞ்சலகத்தில் 17 பணப் பைகள் கொள்ளை.. அதிகாலையிலேயே கைவரிசையைக் காட்டிய கொள்ளையர்கள்

டெல்லியில் அஞ்சலகம் ஒன்றில் இருந்து 17 பணப் பைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் 17 பணப் பைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் அஞ்சலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று காலை ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளனர்.

Robbery in Delhi post office, 17 Cash bags looted

அப்போது பணப்பைகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 17 பைகள் கொள்ளை போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்தப் பணப்பைகள் இன்று அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் அவற்றில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து அதிகாரிகளால் உறுதி படுத்த முடியவில்லை.

இந்த கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சலகத்தில் நிககழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Robbery in the Delhi post office. 17 Cash bags looted by the Strangers. Police registerd case on this issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X