For Daily Alerts
Just In
மும்பையில் எஸ்.பி.ஐ. வங்கிப் பணம் ரூ1.5 கோடி கொள்ளை.. 4 பேர் கைது
எஸ்.பி.ஐ. வங்கி வேனில் இருந்து ரூ.1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி வேனில் இருந்து ரூ.1.5 கோடி பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தாராவியில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு சொந்தமான பணத்தை ஏற்றிக் கொண்டு சென்ற வேனில் இருந்து ரூ 1.5 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
நேற்று மதியம் 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் முன் நிறுத்தி பணத்தை நிரப்பியபோது, வேனில் இருந்த பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளை அடித்துச் சென்றதாக தெரிகிறது. சிசிடிவி காமிராவில் இந்தக் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதை வைத்து போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
Rs 1.5 crore cash was looted in Mumbai on Thursday.