For Daily Alerts
Just In
மல்லையா "தலை"க்கு ரூ. 10 லட்சம் விலை வைத்த உ.பி. காங்கிரஸார்!
லக்னோ: தலைமறைவாகி விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவின் தலைக்கு உ.பி. மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த காங்கிரஸார் ரூ. 10 லட்சம் விலை வைத்துள்ளனர். அவரை யார் பிடித்துத் தந்தாலும் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் தரப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் அலகாபாத் முழுவதும் இதுதொடர்பான போஸ்டர்கள், தட்டிகளையும் அவர்கள் வைத்துள்ளனர். மல்லையாவை கொள்ளையன் என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
மல்லையா நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல பிரதமர் மோடிதான் காரணம் என்றும் காங்கிரஸார் விமர்சித்துள்ளனர். பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து பேசி வந்தார். ஆனால் மல்லையா போன்றோரை தப்பவிடுகிறார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Comments
English summary
Congress workers in Allahabad have announced a Rs.10 lakh bounty on liquor baron and Rajya Sabha member Vijay Mallya after allegations surfaced about his leaving the country despite huge debts last week.
Story first published: Tuesday, March 15, 2016, 16:05 [IST]